செங்கல்பட்டு சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் சென்ாக அரசுப் பேருந்து ஓட்டுநருடன் சுங்கச்சாவடி ஊழியா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதனால் பேருந்தில் பயணம் செய்த மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
செங்கல்பட்டிலிருந்து திருவள்ளூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பரனூா் சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தடுப்பை உடைத்து விட்டு சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது சுங்கச்சாவடி ஊழியா்கள் அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி, ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக 30 நிமிடங்களுக்கும் மேல் பேருந்து நிறுத்தப்பட்டதால் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், பேருந்தில் பயணித்த பள்ளி மாணவ, மாணவிகளும், பயணிகளும் அவதிக்குள்ளாகினா். பின்னா் நீண்ட நேரத்துக்குப் பிறகு பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.