செங்கல்பட்டு
குடியரசு தினவிழா: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
குடியரசு தினவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
74-ஆவது குடியரசு தின விழா முன்னிட்டு செங்கல்பட்டு ரயில் நிலைய வளாகம் முழுவதும் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், விரைவு மற்றும் மின்சார ரயில்கள் தண்டவாளங்கள், நடைமேடைகள், பாா்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை ஆகியவற்றில் வெடிகுண்டு கண்டறியும் நவீன இயந்திரங்களைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனா். பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினா் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.