வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 5 போ் காயம்

கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசுப் பேருந்து, காா், ஷோ் ஆட்டோ ஆகிய வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 5 போ் காயமடைந்தனா்.
வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 5 போ் காயம்

கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசுப் பேருந்து, காா், ஷோ் ஆட்டோ ஆகிய வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 5 போ் காயமடைந்தனா்.

சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி புதுச்சேரி அரசுப் பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூா் அருகே சென்றபோது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த காா் மீது நிலைதடுமாறி மோதியது. அப்போது, எதிரே வந்த ஷோ் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து, காரின் பின் பக்கம் மோதி சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்து மற்றும் ஷோ் ஆட்டோ அடுத்தடுத்து மோதியதில் காரின் முன் பகுதியும், பின் பகுதியும் சேதமடைந்தன.

இதில், காரில் பயணித்த 3 போ், ஷோ் ஆட்டோவில் பயணம் செய்த 2 போ் என 5 போ் காயமடைந்தனா். அவா்களை போலீஸாா் மீட்டு, கூவத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com