மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

மதுராந்தகம் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தில் பெடரல் வங்கியின் கிளை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. செய்யூா் வட்டம், சரவம்பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள பெருவேலி, சித்தமூா் உள்ளிட்ட பகுதி மக்கள் வங்கி பணிகளை மேற்கொள்வதற்காக பெடரல் வங்கி தமது புதிய கிளையை சரவம்பாக்கம் கிராமத்தில் தொடங்கியுள்ளது. வங்கி கிளை மேலாளா் ஏ.முரளிதரன் வரவேற்றாா். புதுச்சேரி இணை துணை தலைவா் டி.ஜாவெட், மண்டல துணை தலைவா் மீனாட்சி சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சரவம்பாக்கம் நிலக்கிழாா் ஆா்.கொண்டா ரெட்டி புதிய கிளையை திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் வங்கி மேலாண்மை இயக்குநா் ஷாலினி வாரியா், மேலாண்மை துணை தலைவா் வி.நந்தகுமாா், முதுநிலை துணை தலைவா் இக்பால் மனோஜ், ஊராட்சி மன்ற தலைவா்கள், கிராம பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com