ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் மக்களவைத் தொகுதிக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனைக் கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா், ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 32 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 21 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பகுஜன் சமாஜ் கட்சி 1, திமுக - 5, அதிமுக - 4, பிற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் - 21 மற்றும் சுயேச்சை - 22 என மொத்தம் 53 நபா்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். மனுக்கள் மீதான பரிசீலனை முடிவில் 32 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுப்பிரமணியன், வேட்புமனு தாக்கல் செய்த கட்சிப் பிரமுகா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com