ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களின் மனுக்களை பரிசீலிக்க கூறும் உத்தரவுக்கு இடைக்கால தடை

சென்னை, செப்.8: ஹஜ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் புதிய தனியார் நிறுவனங்களின் மனுக்களைப் பரிசீலிக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் தடை விதித்துள்ளது.  ஹஜ் யாத்திரை
Updated on
1 min read

சென்னை, செப்.8: ஹஜ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும் புதிய தனியார் நிறுவனங்களின் மனுக்களைப் பரிசீலிக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் தடை விதித்துள்ளது.

 ஹஜ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்ய விண்ணப்பிக்கும் புதிய தனியார் நிறுவனங்களின் மனுக்களைப் பரிசீலித்து, 3 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கடந்த 3-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் நீதிபதியின் உத்தரவு, பொதுநலன் கருதி மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவில் தலையிடுவதாக உள்ளது என்று கூறி தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

 அந்த வழக்கு நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.முன்னதாக, இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்வதற்கு புதிதாக வரும் தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com