தேசிய சதுரங்கப் போட்டிகள் தொடக்கம்

வி சி ஆனந்த் சதுரங்க அறக்கட்டளை சார்பில் நடைபெறும் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகள் சென்னை நெற்குன்றம் எம்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கின.
தேசிய சதுரங்கப் போட்டிகள் தொடக்கம்

வி சி ஆனந்த் சதுரங்க அறக்கட்டளை சார்பில் நடைபெறும் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டிகள் சென்னை நெற்குன்றம் எம்.ஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கின. இந்தப் போட்டிகளை ராஜாஜி பொது நல மையத்தின் தலைவர் ஜி.நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

வரும் செவ்வாய்க்கிழமை (நவ.4) வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். வரும் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.

வி சி ஆனந்த் செஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் செஸ் போட்டி தொடக்க விழாவில்

பங்கேற்ற (இடமிருந்து) எம்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பிந்து அஜித்,

பொருளாளர் விஜயகுமார், செயலர் பிரேம்குமார், வி சி ஆனந்த் செஸ் அறக்கட்டளையின்

தலைவர் சந்திரசேகர், ராஜாஜி பொது நல மையத்தின் தலைவர் ஜி.நாராயணசாமி,

கிராண்ட் மாஸ்டர் அதிபன், சி.எஸ்.ராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com