சென்னை
காலமானார் நா.அருணாசலம்
சென்னை மாணவர் நகலகம் ("ஸ்டூடண்ட் ஜெராக்ஸ்') நிறுவனர் நா. அருணாசலம் (77), கொட்டிவாக்கத்தில் திங்கள்கிழமை காலமானார்.
சென்னை மாணவர் நகலகம் ("ஸ்டூடண்ட் ஜெராக்ஸ்') நிறுவனர் நா. அருணாசலம் (77), கொட்டிவாக்கத்தில் திங்கள்கிழமை காலமானார்.
அவருக்கு மனைவி சாந்தா, மகன் சௌரிராஜன், மகள்கள் வானதி திருமேனி, வாசுகி நீலமேகம் உள்ளனர்.
மறைந்த அருணாசலத்தின் உடல், கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அவரின் இறுதிச் சடங்கு நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும். தொடர்புக்கு: 98410 22444.
ராமதாஸ் இரங்கல்: "தமிழ் வளர்ச்சிக்காக அருணாசலம் ஆற்றி விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வதே அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்' என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.