ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்காக புதிய சமூக கண் மருத்துவமனையை சங்கர நேத்ராலயா கட்ட உள்ளது.
சென்னை பரங்கிமலை - ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள சங்கர நேத்ராலயாவின் டாக்டர் வி.ஜி.அப்புக்குட்டி வளாகத்தில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. மருத்துவமனை கட்டுவதற்கு தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் நன்கொடையாக ரூ.2 லட்சம் அளித்தார். சங்கர நேத்ராலயாவின் "வித்யாசாகர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பயோடெக்னாலஜி அண்ட் சயின்ஸ்' நிறுவனம் தொடங்க தனது மகன் மறைந்த வித்யாசாகர் நினைவாக ஐராவதம் மகாதேவன் ஏற்கெனவே ரூ.50 லட்சம் வழங்கியதை டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
டாக்டர் வசந்தி பத்ரிநாத், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.