சென்னையில் நாய், பூனை உள்ளிட்ட பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் பெருகி வருவதன் காரணமாக ப்ளூ கிராஸில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் 1,800 நாய், பூனைகளை பொதுமக்கள் தத்தெடுத்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி செல்லும் சாலையிலும், காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்திலும் ப்ளூ கிராஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. கேப்டன் சுந்தரம் என்பவரால் கடந்த 1959-இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, 1964-இல் அரசின் அங்கீகாரத்தைப் பெற்று இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட, காயமடைந்த நாய், பூனை, குதிரை, மாடு, பறவைகளை மீட்டு சிகிச்சையளித்து பராமரித்து வருகிறது.
விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ், மருத்துவமனை வசதிகள் கால்நடை மருத்துவர்கள் ப்ளூ கிராஸிடம் உண்டு. விலங்குகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது, அவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளையும் இந்த அமைப்பு செய்து வருகிறது.
இப்போது ப்ளூ கிராஸிடம் நாய், பூனை, எருமை, மாடு, குதிரை , பன்றி 93, அணில், முயல், பறவைகள் என மொத்தம் சுமார் 1700 வளர்ப்புப் பிராணிகள் பராமரிக்கப்படுகின்றன. அண்மைக்காலமாக இங்குள்ள வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனைகளைத் தத்தெடுத்து வளர்க்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.