கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் பாரம்பரிய விளையாட்டுகள்!

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் பாரம்பரிய விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூலை 2018, 10:45 am IST

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் பாரம்பரிய விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பயணிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்வமாக பங்கேற்றனர். தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் நோக்கில், கிரீடா என்னும் நிறுவனமும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் இணைந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் நாள்தோறும் 2 மணி நேரம் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்தி வருகின்றன.

ஒரு மாத காலம் நடைபெறும் இந்த விளையாட்டுகள், ஜூலை 16-இல் நந்தனம் ரயில் நிலையத்திலும், ஜூலை 17-இல் கிண்டி ரயில் நிலையத்திலும், ஜூலை 18-இல் அரும்பாக்கம் ரயில் நிலையத்திலும், ஜூலை 19-இல் அசோக்நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும், ஜூலை 20-இல் திருமங்கலம் மெட்ரோ ரயில்நிலையத்திலும், ஜூலை 22- இல் கீழ்ப்பாகம் மெட்ரோ ரயில் நிலையத்திலும் நடைபெற்றன. இதைதொடர்ந்து, விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் பாரம்பரிய விளையாட்டு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், கட்டம் விளையாட்டு, நாலு கட்ட தாயம், பரமபதம் உள்பட பல்வேறு விளையாட்டுகள் இதில் இடம்பெற்று இருந்தன. இந்த விளையாட்டில் மெட்ரோ ரயில் பயணிகள், மாணவர்கள் என்று 40-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த விளையாட்டு விழாவில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.