ஜன.10-இல் பி.எஃப். குறைதீர் கூட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) குறைதீர் கூட்டம் சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அம்பத்தூர் பி.எஃப். மண்டல
Updated on
1 min read

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) குறைதீர் கூட்டம் சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அம்பத்தூர் பி.எஃப். மண்டல அலுவலகத்தில் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. 
இது குறித்து பி.எஃப். மண்டல ஆணையர் ஓ.வி.நிஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த மாதத்துக்கான பி.எஃப். குறைதீர் கூட்டம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆர் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்பேர் சாலை, முகப்பேர் கிழக்கு, சென்னை-37 என்ற முகவரியில் வரும் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். 
இதில் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், நிறுவனங்களின் உரிமையாளர்கள், பி.எஃப். பங்களிப்பிலிருந்து விலக்கு பெற்ற அம்பத்தூர் எல்லைக்கு உள்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 என்ற அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com