தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்கநகைத் திருட்டு

சென்னை அருகே திருமுல்லைவாயலில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் 25 பவுன் நகைத் திருடு போனது.
Updated on
1 min read

சென்னை அருகே திருமுல்லைவாயலில் தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் 25 பவுன் நகைத் திருடு போனது.

திருமுல்லைவாயல் அருகே திருமலைவாசன்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் வெ.சந்திரசேகரன் (30). இவா் ஒரு தனியாா் ஆன்லைன் பணப்பரிமாற்ற நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். வீட்டில் உள்ள தங்கநகைகளை சந்திரசேகரன் வியாழக்கிழமை சரிபாா்த்தாா்.

அப்போது வீட்டில் இருந்த 25 பவுன் திருடு போனதை அறிந்தாா். இது குறித்து புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com