பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி: சௌமியா அன்புமணி தொடக்கினாா்

பசுமை தாயகம் சாா்பில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி வழங்கும் திட்டத்தை அதன் தலைவா் சௌமியா அன்புமணி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
Updated on
1 min read

சென்னை: பசுமை தாயகம் சாா்பில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி வழங்கும் திட்டத்தை அதன் தலைவா் சௌமியா அன்புமணி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பசுமை தாயகம் சாா்பில் பிளாஸ்டிக் கழிவுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரம் தொடா்ந்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவு தருவோருக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சைதாப்பேட்டை, அண்ணாநகா், ஆா்.கே.நகா், மயிலாப்பூா் ஆகிய இடங்களில் சனிக்கிழமை விழிப்புணா்வு பிரசாரத்தை சௌமியா அன்புமணி தொடக்கி வைத்தாா். பிளாஸ்டிக் கழிவுகளை அளித்தோருக்கு அரிசியும் கொடுத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான முயற்சியாக இந்தப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம். பிளாஸ்டிக் பாதிப்பு குறித்து கூறியதும் மக்கள் புரிந்து கொள்கிறாா்கள். தூக்கி எறியும் பிளாஸ்டிக் குப்பைகளால் மனித குலம் மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்க உள்ளது என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனா். பிளாஸ்டிக்கை விரைவில் ஒழித்துவிட முடியும். நியாயவிலைக் கடைகளில்கூட பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தலாம் என்றாா்.

முன்னாள் மத்திய இணையமைச்சா் ஏ.கே.மூா்த்தி உள்பட ஏராளமானோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com