வீட்டு மாடியில் இருந்து விழுந்த வியாபாரி பலி
By DIN | Published On : 26th April 2019 04:31 AM | Last Updated : 26th April 2019 04:31 AM | அ+அ அ- |

சென்னை, கிண்டியில் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து வியாபாரி இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிண்டி, மடுவங்கரை ஐந்து பர்லாங் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் கோ.மகேந்திரன் (36). இவர் அங்கு டீ கடை நடத்தி வருகிறார். மகேந்திரன் புதன்கிழமை இரவு வீட்டின் மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்டிருந்த பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி மகேந்திரன் கீழே விழுந்தார்.
இதில் பலத்தக் காயமடைந்த அவர், அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன், வியாழக்கிழமை இறந்தார். இது குறித்து கிண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.