

பபாசி நடத்தும் 42-ஆவது புத்தகக் காட்சியை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிவைக்கிறார்.
இதையடுத்து வரும் ஜன.20-ஆம் தேதி வரை வேலை நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறும். மொத்தம் 820 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 லட்சம் முதல் 12 லட்சம் தலைப்புகளில் ஒன்றரை கோடி புத்தகங்கள் வைக்கப்பட உள்ளன.
ஜன.5-ஆம் தேதி புத்தகக் காட்சி அரங்கில் பிரமாண்டமான தமிழன்னை உருவச்சிலை நிறுவப்படவுள்ளது. இதை அமைச்சர் க. பாண்டியராஜன் திறந்துவைக்கிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எழுத்தாளர்களும், கலை உலகினரும் கலந்து கொள்கின்றனர். 8-ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் வாசித்தேன் யோசித்தேன் என்கின்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
புத்தகக் காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரூ.100-க்கு பாஸ் வழங்கும் வசதியும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாஸ் மூலம் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தக கண்காட்சி அரங்குக்குள் சென்று வர முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.