பொறியாளர் வீட்டில் 80 பவுன் திருட்டு 

திருமுல்லைவாயில் கமலம் நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் பெங்களூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான நிறுவனத்தில்
Updated on
1 min read

திருமுல்லைவாயில் கமலம் நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் பெங்களூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் தட்சிணாமூர்த்தி திருமுல்லைவாயலுக்கு வந்தார். அவர் சனிக்கிழமை குடும்பத்தோடு தியாகராயநகர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ. 75 ஆயிரம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com