சென்னையில் 4.7 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 28th March 2019 04:10 AM | Last Updated : 28th March 2019 04:10 AM | அ+அ அ- |

சென்னையில் உணவகம், கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 4.7 டன் பிளாஸ்டிக் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட உணவகங்கள், ஜவுளிக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரத்துக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில், சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் ராம
கிருஷ்ணன் தலைமையில் தியாகராய நகர், சௌகார்பேட்டை, கோயம்பேடு சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள், பல் பொருள் அங்காடி ஆகிய இடங்களில், உணவுப் பாதுகாப்
புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், ரூ. 30 லட்சம்
மதிப்புள்ள 4.7 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், இந்த விதிமீறல் தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...