பூங்கா ரயில் நிலையத்தில் இளைஞர் சடலம்

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த இளைஞர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Updated on
1 min read

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த இளைஞர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் கிடப்பதாக எழும்பூர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், விரைந்து வந்த போலீஸார் அழுகிய நிலையில் கிடந்த அச்சடலத்தை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
 விசாரணையில், அந்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரித்வி மகன் கார்த்திக் (32) என்பதும், பி.காம். படித்து முடித்து வெளிநாடு செல்வதற்காக விசா எடுக்க சென்னைக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்திருந்ததும் தெரியவந்தது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com