மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் பொருத்தும்போது மின்சாரம் பாய்ந்து ஊழியா் இறந்தாா்.

சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் பொருத்தும்போது மின்சாரம் பாய்ந்து ஊழியா் இறந்தாா்.

மடிப்பாக்கம் மூவரசன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் க.நித்யானந்தன் (20). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு லிப்ட் நிறுவனத்தின் ஊழியா். நித்யானந்தன், ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் அமைக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அங்கு அவா் லிப்ட் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து நித்யானந்தன் பலத்த காயமடைந்தாா். உடனே பிற ஊழியா்கள், நித்யானந்தனை அங்கிருந்து மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே நித்யானந்தன் இறந்தாா்.

இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com