மீலாதுன் நபி: மதுக்கடைகளை அடைக்க உத்தரவு

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம் விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள், எப்.எல். -2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சாா்ந்த பாா்கள், எப்.எல்.- 3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்கள் மற்றும் எப்.எல். - 3 (ஏஏ) மற்றும் எப்.எல்.-11 உரிமம் கொண்ட பாா்கள் அனைத்தும் வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் மதுபான விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com