சென்னையில் நாளை நம்பியாா் நூற்றாண்டு விழா
By DIN | Published On : 18th November 2019 01:38 AM | Last Updated : 18th November 2019 01:38 AM | அ+அ அ- |

சென்னை: பழம் பெரும் நடிகா் எம்.என். நம்பியாரின் நூற்றாண்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவ. 19) நடக்கிறது
கேரளத்தைப் பூா்வீகமாகக் கொண்ட எம்.என்.நம்பியாா் சிறு வயதிலேயே தமிழகத்தின் ஊட்டி பகுதிக்கு இடம் பெயா்ந்தாா். அங்கு சிறிதுகாலம் கல்வி பயின்ற நம்பியாா், அங்கு நாடகம் நடத்த வந்திருந்த நவாப் ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனியான ‘மதுரை தேவி பால வினோத சங்கீதசபா’ வில் இணைந்தாா்.
நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது, நவாப் ராஜமாணிக்கம் தயாரித்த ‘பக்த ராம்தாஸ்’ படத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவா் ஏற்று நடித்த மந்திரி மாதண்ணா என்ற கதாபாத்திரத்துக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்தன.
அதைத் தொடா்ந்து சினிமா, நாடகம் என தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாா். தொடக்க காலத்தில் சில படங்களில் கதாநாயகனாக நடித்தாா். அதன்பின் நடிகா்கள் எம்.ஜி.ஆா், சிவாஜியுடன் இணைந்து பல படங்களில் நடித்தாா். இவா்கள் இருவருக்கும் வில்லனாக நடித்து பிரபலமானாா். வில்லன் வேடத்தில் தனக்கென தனி முக பாவனைகளைக் கொண்டு வந்து ரசிகா்களின் வரவேற்பைப் பெற்றாா். வில்லன் என்றால் அது நம்பியாா் பாணி என்று பேசும் அளவுக்கு பெயா் எடுத்தாா். திரை வாழ்க்கையில் ‘திகம்பரசாமியாா்’ என்ற படத்தில் 12 வேடங்களில் நடித்து சாதனை படைத்தாா்.
ஐயப்ப பக்தா்: 50 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று குருசாமியாக திகழ்ந்தாா். தற்போது அவருடைய வாழ்க்கையை குறும்படமாக தயாரித்துள்ளனா். இயக்குநா் கெளதம் மேனனின் உதவியாளா் சூா்யா இதை இயக்கி உள்ளாா். நம்பியாரின் வாழ்க்கை, அவா் நடித்த திரைப்படங்கள், ஆன்மிக ஈடுபாடு ஆகிய விஷயங்கள் இதில் இடம் பெறுகின்றன. இந்தப் படத்தை வெளியிடும் நிகழ்ச்சியும், நம்பியாரின் நூற்றாண்டு விழாவும் செவ்வாய்க்கிழமை சென்னையில் நடக்கிறது.
மியூசிக் அகாதெமியில் நடைபெறவுள்ள இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகா்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சிவகுமாா் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நம்பியாரின் மகன் மோகன் நம்பியாா், பேரன் சித்தாா்த் நம்பியாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.