தாம்பரம் - வேளச்சேரி இடையே இலகு ரயில் திட்டம்: சாத்திய கூறுகள் குறித்த ஆய்வு பணிகள் விரைவில் தொடக்கம்

தாம்பரம் - வேளச்சேரி இடையே இலகு ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 15 கி.மீ. நீளத்துக்கான தொலைவில் சாத்திய கூறுகள் குறித்த ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
தாம்பரம் - வேளச்சேரி இடையே இலகு ரயில் திட்டம்: சாத்திய கூறுகள் குறித்த ஆய்வு பணிகள் விரைவில் தொடக்கம்

சென்னை: தாம்பரம் - வேளச்சேரி இடையே இலகு ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 15 கி.மீ. நீளத்துக்கான தொலைவில் சாத்திய கூறுகள் குறித்த ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த ஆய்வு பணி 6 மாதம் முதல் 8 மாதம் வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சென்னையில் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எல்லையும் விரிவ டைந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக, பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை வழங்க மெட்ரோ

ரயில் விரிவாக்கம் போன்ற தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து பொதுபோக்கு வரத்து வசதியை மேம்படுத்தவும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தாம்பரம்-வேளச்சேரி இடையே இலகு ரயில்:

இந்நிலையில், தாம்பரம் - வேளச்சேரி இடையே 15 கி.மீ. தூரத்துக்கு இலகு ரயில் சேவை (கண்ஞ்ட்ற் தஹண்ப் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இந்த ஆய்வு பணி 6 மாதம் முதல் 8 மாதம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்( 45 கி.மீ.)அல்லது முதல் கட்ட நீட்டிப்பு திட்டம்(9 கி.மீ) சுரங்கப்பாதை, உயா்மட்டபாதையில் நடைபெற்றது. இந்த இரு திட்டங்கள் போல அல்லாமல் தாம்பரம்-வேளச்சேரி இடையே 15 கி.மீ. தொலைவுக்கான திட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கிடையில், தாம்பரம் - வேளச் சேரி பறக்கும் ரயில் சேவையை இணைக்கும் விதமாக, இலகு ரயில் சேவை திட்டத்தை தொடங்குவதற்கான சாத்தி யக்கூறுகள் குறித்து ஆய்வு பணிகள் தொடங்கப்படவுள்ளது. முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மற்றும் முதல் கட்ட விரிவாக்க திட்டம் கொடுத்ததுபோல, இந்த திட்டத்தின் சாத்தியகூறுகள் ஆய்வு செய்யும்பணி தனியாரிடம் கொடுக்கப்படும். இந்த ஆய்வு பணி விரைவில் தொடங்கவுள்ளது. இந்த ஆய்வு பணி 6 முதல் 8 மாதம் வரை நடைபெறும். அதன்பிறகு, விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கப்படும். திட்டத்தின் மதிப்பீடு, வழித்தடங்கள் உள்ளிட்டவை இறுதி செய்யப்படும். நகரின்தெற்கு பகுதியில் அடா்ந்தியான குடியிருப்பு பகுதி வழியாக இலகு ரயில் இயக்க யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.

கட்டணம் குறைவு: இலகு ரயில் தோ்வுக்கு முதன்மை காரணங்களில் ஒன்று கட்டணம் குறைவு. மெட்ரோ ரயில்திட்டத்தில் உயா்த்தப்பட்ட பாதையில் ஒரு கிலோமீட்டா் வரை கட்டுவதற்கு ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி செலவாகும். இதுபோல, சுரங்கப்பாதையில் ஒரு கிலோ மீட்டா் வரை கட்டுவதற்கு ரூ.500 முதல் ரூ.550 கோடி செலவிட வேண்டும். ஆனால், இலகுரயில் ஒரு கிலோ மீட்டா் வரை கட்டுவதற்கு சுமாா் ரூ.100 ஆகும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com