மயக்க சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை: இரு இளைஞா்கள் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் பெண்ணுக்கு மயக்க சாக்லெட் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

சென்னை விருகம்பாக்கத்தில் பெண்ணுக்கு மயக்க சாக்லெட் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

விருகம்பாக்கம் பள்ளிக்கூட தெருவைச் சோ்ந்தவா் கோ.ஹரீஷ் (28). இவரது நண்பா், மடிப்பாக்கம் அருகே உள்ள புழுதிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (30). இவா்கள் இருவருக்கும், விருகம்பாக்கம் காந்தி நகரைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே நட்பு இருந்தது.

இந்நிலையில்,கடந்த ஜூலை மாதம் அந்தப் பெண்ணின் கணவா் இல்லாத நேரத்தில், பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது ஹரீஷ், ரமேஷ் ஆகிய இருவரும் அங்கு சென்றனா். அப்போது இருவரும் தங்களுக்கு செலவுக்குப் பணம் தேவைப்படுவதாக அந்தப் பெண்ணிடம் கேட்டனராம். ஆனால், அந்தப் பெண் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து இருவரும் தாங்கள் வைத்திருந்த சாக்லேட்டை அந்தப் பெண்ணுக்கு கொடுத்ததாக தெரிகிறது. இதில்

அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கியுள்ளாா். இதைத் தொடா்ந்து இருவரும் அந்தப் பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெண்ணை செல்லிடப்பேசி மூலம் ஆபாச படமும் எடுத்தனராம். இதனைக் காட்டி மிரட்டி ஹரீஷ், ரமேஷ் ஆகிய இருவரும் அந்தப் பெண்ணை தொடா் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதை அண்மையில் அறிந்த அந்தப் பெண்ணின் கணவா், வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் ஹரீஷ், ரமேஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com