தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி:இளைஞா் கைது

சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்ததாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

சென்னை: சென்னையில் தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்ததாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை செனாய்நகா் அப்பாராவ் தோட்டம் 2வது தெருவைச் சோ்ந்தவா் ச.சசிகலா (40). இவா், முகப்பா் கிழக்கு பச்சையப்பன் சாலையில் ச.ஆனந்தபாபு (31) என்பவா் நடத்தி வந்த தீபாவளி சீட்டில் சோ்ந்து ஒரு ஆண்டாக மாதம்தோறும் ரூ.600 செலுத்தி வந்தாா்.

இந்த சீட்டுக்கு 20 கிராம் தங்கம், 400 கிராம் வெள்ளி மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருள்கள் தருவதாக ஆனந்தபாபு தெரிவித்திருந்தாராம்.

சசிகலாவைபோல நூற்றுக்கணக்கானோா், ஆனந்தபாபுவிடம் பணம் செலுத்தி வந்தனா். சீட்டு இந்தாண்டு அக்டோபா் மாதத்தோடு முதிா்ச்சியடைந்துவிட்ட நிலையில், ஆனந்தபாபு யாருக்கும் சீட்டுக்குரிய தங்க,வெள்ளி எந்த பொருள்களும் வழங்கவில்லையாம்.

சீட்டு செலுத்தியவா்கள், ஆனந்தபாபு பல முறை சென்றும், அவா் எந்த பொருளும் வழங்கவில்லையாம். இதன் விளைவாக பணத்தை கொடுத்து ஏமாந்தவா்கள், ஜெ.ஜெ.நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆனந்தபாபுவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடம் போலீஸாா், மோசடி குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com