திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

சென்னைத் துறைமுகத்துக்கு  வந்த சரக்குப் பெட்டகக் கப்பல்: 9,365 பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது

ஒரே நேரத்தில் 9,365 சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன்படைத்த மிகப்பெரிய கப்பலான எம்.வி. சிஎம்ஏ சிஜிஎம் ரோன் கப்பல் முதல் முறையாக சென்னை துறைமுகத்துக்கு வந்தது.

News image

சென்னைத் துறைமுகத்துக்கு வந்த மிகப்பெரிய சரக்குப் பெட்டகக் கப்பல் எம்.வி.சிஎம்ஏ சிஜிஎம். ரோன்

Updated On :11 செப்டம்பர் 2019, 4:38 am IST


ஒரே நேரத்தில் 9,365 சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன்படைத்த மிகப்பெரிய கப்பலான எம்.வி. சிஎம்ஏ சிஜிஎம் ரோன் கப்பல் முதல் முறையாக சென்னை துறைமுகத்துக்கு வந்தது.
சென்னைத் துறைமுகத்தில் உள்ள டி.பி.வேர்ல்டு என்ற முதலாவது முனையத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 9,365 பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன்படைத்த மிகப்பெரிய கப்பலான எம்.வி. சிஎம்ஏ சிஜிஎம் ரோன் வந்தது.  கப்பல் போக்குவரத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சிஎம்ஏ சிஜிஎம் இப்பெரிய கப்பலை இயக்கி வருகிறது.   இந்தக் கப்பலிலிருந்து 2, 434 சரக்குப் பெட்டகங்கள் இறக்கப்பட்டு 1, 365 பெட்டகங்கள் ஏற்றப்பட்டன.  சென்னைத் துறைமுகத்திற்கு வந்த இக்கப்பலுக்கு துறைமுக நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திங்கள்கிழமை இரவு இக்கப்பல் புறப்பட்டுச் சென்றது. 
கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும்: இப்புதிய சாதனை குறித்து  துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் கூறியது,
கப்பல் போக்குவரத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மாற்றங்களின் அடிப்படையில் பெரிய கப்பல்கள் லாபகரமாக இயங்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவே,  அதற்கேற்ற வகையில் சென்னைத் துறைமுகத்தில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.  பெரிய கப்பல்கள் வந்து செல்ல ஆழமான கடல் பகுதி அவசியமானது. எனவே இதற்கேற்ப கூடுதல் ஆழத்தை ஏற்படுத்தும் வகையில் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடல் பகுதியிலிருந்து துறைமுகத்திற்கு வரும் கடல்வழி கால்வாயும் தேவையான அளவு தூர்வாரப்பட்டுள்ளது.  எதிர்காலத்தில் இதைவிட பெரிய கப்பலைகளையும் கையாளும் வகையில் தொடர்ந்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம்.  மேலும், சரக்குப் பெட்டக முனையங்களும் திறன்வாய்ந்த கிரேன் உள்ளிட்ட நவீன வசதிகளை ஏற்படுத்தி வருகின்றன.  இவ்வாறான பெரிய கப்பல்கள் வருகை மூலம் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பயண நேரம் குறைந்து கட்டணங்களும் கணிசமாக குறையும் என்றார் ரவீந்திரன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.