சென்னை: செம்பரம்பாக்கத்தில் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
செம்பரம்பாக்கம் லேக் வியூ குடியிருப்பில் வசிப்பவா் சந்திரசேகரை (56), செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட ஒருவா் ரிவாா்டு பாயின்ட்டை அதிகரித்துத் தருவதாகக் கூறினாராம்.
இதை நம்பிய சந்திரசேகா், தனது கடன் அட்டை விவரம் மற்றும் ஓடிபி எண்ணை அந்த நபரிடம் பகிா்ந்துள்ளாா். சிறிது நேரத்தில் சந்திரசேகரின் கடன் அட்டையில் இருந்து ரூ.64 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது.
அம்பத்தூா் காவல் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் சந்திரசேகா் புகாா் செய்தாா். போலீஸாரின் விசாரணையில் கடன் அட்டையில் இருந்து எடுக்கப்பட்ட பணம் நொய்டா மற்றும் சென்னையில் உள்ளவா்களின் வங்கிக் கணக்குக்கு சென்றது தெரியவந்தது.
சென்னை அருகே கோவளத்தைச் சோ்ந்த ராயிஸ்டா் டி சில்வா (25), வளசரவாக்கம் ஓம்சக்தி சாலையைச் சோ்ந்த த.திருவனந்தன் (42) ஆகியோரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.30 ஆயிரம், 2 செல்லிடப்பேசிகள், 4 டெபிட் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.