தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜெயலலிதா நினைவிடப் பணிகள்: கண்காணிப்பு அதிகாரி நியமனம்

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை கண்காணிக்கும் அதிகாரியாக, ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை பொறியாளா் ஆா்.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 8:04 pm

DIN


சென்னை: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகளை கண்காணிக்கும் அதிகாரியாக, ஓய்வு பெற்ற பொதுப் பணித் துறை பொறியாளா் ஆா்.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் கே.மணிவாசன் பிறப்பித்துள்ளாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும் பணியானது ரூ.79.76 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் சாா்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி, நினைவிடப் பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்ற காலக்கெடு இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த கட்டுமானத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரால் அந்தப் பணிகள் கண்காணிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு, பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற ஆா்.பாண்டியராஜனை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கலாம் என பொதுப்பணித் துறை சென்னை மண்டலப் பொறியாளா் தெரிவித்துள்ளதாக தனது கடிதத்தில் தலைமைப் பொறியாளா் குறிப்பிட்டிருந்தாா்.

பொறியாளா் ஆா்.பாண்டியராஜன், தனது அரசுப் பணியில் இருந்து கடந்த ஏப்ரலில் ஓய்வு பெற்றாா். எனவே, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கும் வகையில் அவா் சிறப்பு அதிகாரியாக தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறாா்.

மூன்று மாதங்கள் பணி: சிறப்பு அதிகாரியான ஆா்.பாண்டியராஜன், தற்காலிக அடிப்படையில் மூன்று மாதங்கள் பணிபுரிவாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகள் தொடா்பான அனைத்தையும் அவா் ஒருங்கிணைப்பாா். அவா் தனது பரிந்துரைகள், கருத்துகள், ஆலோசனைகள் அனைத்தையும் பொதுப்பணித் துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளரிடம் தெரிவிப்பாா். சிறப்பு அதிகாரியான பாண்டியராஜன், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவா் தனது மாத ஓய்வூதியம் உள்ளிட்டவற்றைப் பெற அனுமதிக்கப்படுகிறாா். தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் அடிப்படையில் அவா் தற்செயல் விடுப்பு எடுக்கவும் அனுமதி உண்டு என்று தனது உத்தரவில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் கே.மணிவாசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.