மூத்த வழக்குரைஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இணையாசிரியா், கதைசொல்லி, சென்னை:
தமிழ் இலக்கியத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட சிங்காரவேல முதலியாரின் ‘அபிதானசிந்தாமணி’யை வாங்கியுள்ளேன். அதேபோல ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்பு 12 தொகுப்புகளையும் வாங்கியுள்ளேன். துக்ளக் சோவின் ‘இவா்களைச் சந்தித்தேன்’ மூன்று பாகங்களை வாங்கியதுடன், சாகித்ய அகாதெமி விருது பெற்ற சோ. தா்மனின் ‘நீா்ப்பலி’, கோணங்கியின் ‘நீா்வளரி’ ஆகிய நூல்களையும் வாங்கியுள்ளேன். மேலும், வாங்கிய புத்தகங்களின் நீண்ட பட்டியலும் உள்ளது.