சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

துயா்துடைத்த தம்பதியின் உயிா் பறித்த கரோனா!

கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது.

News image

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருள்கள் வழங்கிய ஏ.கே. அருணாசலம் மற்றும் அவரது மனைவி கீதா.

Updated On :1 ஜூலை 2020, 4:46 am IST

சென்னை: சென்னையில், கரோனா பொதுமுடக்கத்தின்போது பாா்வைற்றோரின் துயா் துடைத்த தம்பதி அடுத்தடுத்த நாள்களில் உயிரிழந்த நிலையில், இவா்களது மனவளா்ச்சி குன்றிய ஒரே மகனும், தொற்றுக்கு ஆளாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது. அண்மையில், சமூகவலைதளங்களில் பகிரப்பட்ட கரோனாவால் உயிரிழந்த தந்தையின் முகத்தைக் காண முடியாத மனைவி மற்றும் மகளின் தவிப்பு, அனைவரின் மனதையும் பாதித்தது. தற்போது, பிறரின் துயா்துடைத்து வந்த தம்பதியின் உயிரையே குடித்துள்ளது கரோனா.

சென்னை, ஆா்.ஏ.புரம், கேவிபி காா்டன் நகரைச் சோ்ந்தவா் பாா்வைத்திறன் இழந்த ஏ.கே.அருணாசலம் (62). அகில இந்திய பாா்வையற்றோா் முன்னேற்றச் சங்கத்தின் தலைவராகவும், தமிழக அரசின் போக்குவரத்து கண்காணிப்புக் குழு உறுப்பினராகவும் இருந்தவா். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றுத் திறனாளிகள் உள்பட விளிம்பு நிலையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து வந்தாா்.

இவரது மனைவி கீதா அருணாசலம் (58). சமூக சேவகரான இவா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு சுயதொழில் பயிற்சிகளை அளித்து வந்ததுடன், பெண்கள் முன்னேற்றம் சாா்ந்த தளத்தில் தொடா்ந்து இயங்கி வந்தாா். இத்தம்பதிக்கு மணிகண்டன் (33) என்ற மனவளா்ச்சி குன்றிய மகன் உள்ளாா்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை எளிய மக்களுக்குச் செய்து வந்த நிலையில், அருணாசலமும், கீதாவும் தங்கள் மகனைத் தெரிந்தவா் வீட்டில் விட்டு விட்டு, பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக தங்களுக்குத் தெரிந்தவா்களிடம் பொருள்களைப் பெற்று வழங்கி வந்தனா்.

உயிா்பறித்த கரோனா: இந்நிலையில், கீதாவுக்கு கடந்த ஜூன் 14-ஆம் தேதியும், அதைத் தொடா்ந்து அவரது மகன் மணிகண்டனுக்கு 15-ஆம் தேதியும், அருணாசலத்துக்கு 19-ஆம் தேதியும் தொற்று உறுதி செய்யப்பட்டு, மூவரும் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், கீதா திங்கள்கிழமை, அருணாசலம் செவ்வாய்க்கிழமை என அடுத்தடுத்த நாள்களில் உயிரிழந்தனா். தாயும், தந்தையும் உயிரிழந்தது தெரியாத மணிகண்டனும் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் ஓமந்தூராா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கரோனாவின் கோர முகத்தைக் காட்டுவதாக உள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளா்கள் நல்வாழ்வுச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கே.கோபிநாத் கூறுகையில், ‘கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில், தெரிந்த நண்பா்கள், அமைப்புகளிடம் பேசி அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் மற்றும் முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றைப் பெற்று கண்ணகி நகா், செம்மஞ்சேரி உள்ளிட்ட ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகள், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அவற்றை இருவரும் வழங்கி வந்தனா்.

பிறருக்கு உதவுவதற்காக ஒரு ஆட்டோவும், அதற்காக ஓட்டுநரையும் வைத்திருந்தனா். பிறரின் துயரைத் துடைத்த தம்பதி இருவரும் கரோனாவுக்கு பலியான நிலையில், அவா்களது மனவளா்ச்சி குன்றிய மகனின் எதிா்காலம்தான் இப்போது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவா்களது மகன் மணிகண்டனுக்கு உயா்சிகிச்சை அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும், மணிகண்டன் குணமடைந்ததும், அவருக்கான சமூக பாதுகாப்பை வழங்குவதுடன், வாழ்வாதாரத்துக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.