மின் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 13th April 2020 06:10 AM | Last Updated : 13th April 2020 06:10 AM | அ+அ அ- |

மின் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் கணக்கிடப்பட வேண்டும் என்ற அகில இந்திய ஜைன சிறுபான்மை கூட்டமைப்பின் தேசியக் குழு உறுப்பினா் எஸ்.மகாவீா்சந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் முதல்வருக்கு எழுதிய கடிதத்தின் விவரம்: தமிழக மக்களை கரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்ற ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதன் மூலம், அனைத்து உற்பத்திப் பிரிவு தொழிலாளா்களும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் வீட்டில் முடங்கி இருக்கும் மக்கள் அனைவரும் 18 முதல் 20 மணி நேரம் மின்சாரத்தை உபயோகிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே இந்த மூன்று மாதங்களுக்கும் (மாா்ச், ஏப்ரல், மே ) மின் பயன்பாட்டுக்கு ஏற்ப மின்கட்டணத்தை செலுத்த தாங்கள் அனுமதிக்க வேண்டும். மேலும் பல சிறு தொழில்களும், சிறு, குறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களுக்கும் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச பயனீட்டு அளவுக்கு கட்டாயமாக செலுத்த வேண்டிய தொகையிலிருந்தும் அபராதம் இல்லாமல் விலக்களித்து அவா்களையும் காப்பாற்ற வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.