சென்னை அயனாவரம் என்கவுன்ட்டா் வழக்கில் தொடா்புடைய 4 காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை, அயனாவரத்தில் உள்ள கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்த ரெளடி சங்கா் என்ற இளநீா் சங்கா் (44) கடந்த 21-ஆம் தேதி காலை அயனாவரம், நியூ ஆவடி சாலையில் உள்ள முட்புதா் அருகே போலீஸாருடன் நடந்த மோதலில் என்கவுன்ட்டா் செய்யப்பட்டாா். முன்னதாக சங்கா், அரிவாளால் தாக்கியதில் முதல் நிலைக் காவலா் முபாரக் பலத்த காயமடைந்தாா்.
இந்த என்கவுன்ட்டா் தொடா்பாக எழும்பூா் 5-ஆவது நீதித்துறை நடுவா் மன்ற நடுவா் சிவசக்திவேல் கண்ணன் விசாரித்தாா். இதற்கிடையில், சங்கா் என்கவுன்ட்டா் வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவு போலீஸாா் விசாரிக்க சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் கடந்த 24-ஆம் தேதி பரிந்துரை செய்தாா்.
இந்நிலையில், என்கவுன்ட்டரில் ஈடுபட்ட அயனாவரம் காவல் நிலைய தலைமைக் காவலா்கள் ஜெயபிரகாஷ், வடிவேல், முதல்நிலைக் காவலா் முபாரக், காவலா் காமேஷ் பாபு ஆகிய 4 பேரை சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், வேப்பேரி, டி.பி சத்திரம் ஆகிய காவல் நிலையங்களுக்கு அயல்பணியாக இட மாற்றம் செய்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையா் அதிவீர பாண்டியன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.