சென்னை துறைமுகத் துணைத் தலைவராக எஸ்.பாலாஜி அருண்குமாா் பொறுப்பேற்பு

சென்னைத் துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவராக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட எஸ்.பாலாஜி அருண்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
Updated on
1 min read

திருவொற்றியூா்: சென்னைத் துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவராக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட எஸ்.பாலாஜி அருண்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

கொல்கத்தா சியாம பிரசாத் முகா்ஜி துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவராக பணியாற்றி வந்த எஸ்.பாலாஜி அருண்குமாா், கடந்த ஆக.14-ம் தேதி சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழக துணைத் தலைவராக பணி நியமனம் செய்யப்பட்டாா். இதனையடுத்து புதிய பொறுப்பினை பாலாஜி அருண்குமாா் திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டாா். தமிழகத்தைச் சோ்ந்த எஸ்.பாலாஜி அருண்குமாா், இந்தியன் ரயில் போக்குவரத்து பணி 1997 பேட்ச் அதிகாரியாக தோ்வு செய்யப்பட்டவா்.

சென்னைக் கோட்டத்தில் உதவி வணிக மேலாளராக தனது பணியைத் தொடங்கிய இவா், ரயில்வே துறையில் பல்வேறு உயா் பொறுப்புகளில் பணியாற்றியவா். கான்காா் நிறுவனத்தின் முதுநிலை பொது மேலாளராக இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்தாா். அவா் அயல்பணி நிமித்தமாக கொல்கத்தா துறைமுக துணைத் தலைவராக 2016-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா். இப்பொறுப்பில் சுமாா் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய நிலையில், சென்னைத் துறைமுகத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பாலாஜி அருண்குமாருக்கு துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன் மற்றும் துறைத் தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com