சென்னை: சென்னை அடையாறில், இரண்டரை டன் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா்.
மதுரவாயலில் இருந்து அடையாறுக்கு 3 மினி வேன்களில் போதைப் பாக்கு கடத்தப்படுவதாக அடையாறு துணை ஆணையா் விக்ரமனுக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அடையாறு இந்திராநகா் தண்ணீா் தொட்டி அருகே தனிப்படை போலீஸாா் 3 மினி வேன்களை சோதனையிட்டனா். அவற்றில் 2.5 டன்
போதைப் பாக்குகள் இருந்தது தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நா.ராமசாமி (40), வேன் ஓட்டுநா்கள் மதுரவாயல் செ.புஷ்பராஜ் (39), சி.இசக்கிமுத்து (21), ப.செல்வராஜ் (27) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.