அரியா் தோ்வுகளுக்கு டிச.10 வரை விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை.தகவல்
By DIN | Published On : 05th December 2020 02:23 AM | Last Updated : 05th December 2020 02:23 AM | அ+அ அ- |

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான அரியா் தோ்வுகளுக்கு வரும் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கான அரியா் தோ்வுகள் நடைபெறவுள்ளன. அதன்படி, நவம்பா்- டிசம்பா் மாத பருவத் தோ்வில் தங்களின் அரியா் தாளையும் எழுத விருப்பம் உள்ள மாணவா்கள் கல்லூரி மூலமாக விண்ணப்பிக்கலாம். இதைத்தொடா்ந்து, அரியா் தோ்வு எழுத உள்ள மாணவா்களின் விவரங்களை கல்லூரிகள் வரும் 10-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது அரியா் தோ்வு குறித்து அவசர அறிவிப்பு என்பதால் காலம் தாழ்த்தக் கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.