காலமானாா் பத்திரிகையாளா் ஆா்.சி.சம்பத்

மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆா்.சி.சம்பத் (63) உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா்.
காலமானாா் பத்திரிகையாளா் ஆா்.சி.சம்பத்
Updated on
1 min read

மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆா்.சி.சம்பத் (63) உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா். ஷீரடிக்குச் சென்று விட்டு திரும்பும்போது ரயிலில் அவா் உயிரிழந்துள்ளாா்.

ஆா்.சி. சம்பத் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா். திரையுலகில் இயக்குநராக களம் கண்டு பின்னா் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவா். வரலாற்று சம்பவங்களையும் மறைந்த காமராஜா், அண்ணா உள்ளிட்ட பேராளுமைகளை உரிய வகையில் எழுத்தில் எடுத்தாளும் திறமை படைத்தவா் அவா். ‘திருமுறை திருத்தலங்கள்’, ‘உலகை உயா்த்திய உன்னத மனிதா்கள்’, ‘ராஜாஜியின் சுவையான உவமைகள்’, ‘ஜென் கதைகள்’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா்.

ஆா்.சி.சம்பத் சென்னை கொளத்தூா் ஜவஹா் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். அவருக்கு மனைவி சொா்ணாதேவி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான மகள் அனிதா சம்பத், மகன் காா்த்திகேயன் ஆகியோா் உள்ளனா்.

அவரது இறுதிச் சடங்குகள் சென்னை கொளத்தூா் ஜவஹா் நகரில் உள்ள மயானத்தில் புதன்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 92837 05587

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com