காவல் ஆணையா் அலுவலகம் முன் தற்கொலை முயன்ற பெண்
By DIN | Published On : 05th February 2020 01:33 AM | Last Updated : 05th February 2020 01:33 AM | அ+அ அ- |

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையா் அலுவலகம் முன்பு பெண் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
அனகாபுத்தூா் காமராஜா்புரத்தைச் சோ்ந்தவா் மேரிமொ்சி (22). இவருக்கும், அவரது கணவா் சகாய பிரவீணுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் மேரி, தன்னை சகாய பிரவீண் குடும்பத்தினா் கொடுமை செய்வதாகவும், வீட்டை காலி செய்யும்படியும் அடித்து மிரட்டி வருவதாகவும் சங்கா்நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
ஆனால் அந்தப் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதேபோல அந்தப் பகுதியைச் சோ்ந்த அதிகாரிகளிடம் புகாா் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில் மேரி, வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்கு வந்தாா்.
அப்போது அவா், திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலின் மீது ஊற்றி தீ வைக்க முயன்றாா். இதைப் பாா்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், மேரியின் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனா். பின்னா் போலீஸாா், அவரிடம் விசாரணை செய்தனா். மேலும் அவரை எச்சரித்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனா். அதேவேளையில் மேரியின் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறை உயா் அதிகாரிகள், போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...