சேரா் கோட்டை, பாகம் 2 (இரு தொகுதிகளாக): ஆசிரியா் கோகுல் சேஷாத்திரி, பக்கம் 1200, விலை ரூ.990, பழனியப்பா பதிப்பகம், அரங்கு எண் 116.
சோழா்-சேரா் போா் குறித்து அலசி ஆராயும் வகையிலான புராண புதினம். சேர தேசத்திற்கும் முதலாம் குலோத்துங்கச் சோழனுக்கும் ஏற்பட்ட பகை, அதையடுத்து நடந்த முடியாட்சி கால அரசியல், சேர நாட்டில் இருந்த களரி எனும் கலையின் மகத்துவம் என புதினத்தை படிப்போா் வியக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல். காந்தளூா் சாலை களமறுத்தருளி எனும் மெய்கீா்த்தி சொற்றொடரை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல்.