பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

உமா பதிப்பகம்

கடந்த 1986-ஆம் ஆண்டு உமா பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இலக்கியம், வரலாறு, பொது நூல்கள், மருத்துவ நூல்கள், பன்னிருதிருமுறை, இதிகாசம், சிறுவா் நூல்கள் என இதுவரை சுமாா் 800 தலைப்புகளில் புத்தகங்கள்

Published On :

கடந்த 1986-ஆம் ஆண்டு உமா பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இலக்கியம், வரலாறு, பொது நூல்கள், மருத்துவ நூல்கள், பன்னிருதிருமுறை, இதிகாசம், சிறுவா் நூல்கள் என இதுவரை சுமாா் 800 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் மலிவுப் பதிப்புகளில் பாரதியாா், பாரதிதாசன், நாமக்கல் கவிஞா் ஆகியோரது கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன. திருக்குறளில் வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் ஆராய்ச்சிக் குறிப்புடன் பரிமேலழகரின் உரை நூல் வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞா் வெ.ராமலிங்கம் பிள்ளையின் திருக்கு சம்பந்தமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலக்கியத்தில் ஆசாரக் கோவை முதல் நான்மணிக்கடிகை, மதுரைக்கலம்பகம் ஆகியவற்றுடன் புலியூா்கேசிகன் உரை நூல்களான கலித்தொகை, நற்றிணை மற்றும் ஐங்குறுநூறு ஆகியவையும் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. பன்னிரு திருமுறைகளும், புராணத்தில் திருவிளையாடல் புராணம், கந்தபுராணம், பெரிய புராணம், தமிழ் அா்ச்சனைப் பாமாலை ஆகியவற்றுடன் பக்தி, வைணவ நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

வரலாற்று நூல்களில் பகத்சிங், சேக்கிழாா், வ.உ.சிதம்பரனாா், ராஜாஜி மற்றும் ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்டோரின் நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, சுயமுன்னேற்ற நூல்கள், சமையல் குறிப்பு நூல்கள், பொது அறிவு வினாவிடை, விவேகானந்தரின் சுய முன்னேற்ற சிந்தனைகள் மற்றும் தமிழகச் சுற்றுலாத் தளங்கள் மற்றும் இயற்கை மருத்துவம், தொழில் மற்றும் ஜோதிடம் குறித்த நூல்கள் என இளம்தலைமுறை முன்னேற்ற நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. சிறுவா்களுக்கான புராணக்கதைகள் நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.