அரவிந்தராஜ் (27), காவலர், அடையாறு:
நாவல்களைப் பிடிக்கும் என்பதால் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பழைய நாவல்களை வாங்க விரும்பி வந்தேன். அவற்றோடு "வேல்பாரி' நாவலையும் வாங்கிச் செல்கிறேன். அத்துடன் சசிதரூரின் "இந்தியாவின் இருண்டகாலம்', ஜெ.ராம்கியின் சீக்கியர் கலவரம், "மார்க்சியம் அன்றும் இன்றும்' உள்ளிட்ட நூல்களையும் வாங்கியுள்ளேன்.