ஆங்கிலத்தில் சு.தியோடர்பாஸ்கரன், தமிழில்- அ.மங்கை, பதிப்பகம்-அகநி, பக்கம்-237, விலை-ரூ.220, தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும் பொழுது போக்கு ஊடகங்களும் என்ற பொருளில் 1880-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரையிலான தமிழ் திரைப்பட வரலாறு குறித்த இந்த நூலானது வாசகர்களைத் தாண்டி இலக்கியவாதிகளாலும் வரவேற்பைப் பெற்றதாகும்.
தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் பொழுதுபோக்கு அம்சங்கள் எப்படி அரசியல் முக்கியத்துவம் பெற்றன என்பதுடன், தமிழ் பத்திரிகைகள், பாட்டுப் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றின் மூலம் அதை விளக்கியிருக்கும் விதம் கவனிக்கத்தக்கதாக உள்ளது.