அஸ்லினா (22), தனியார் நிறுவன ஊழியர், திருவான்மியூர்:
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராமின் "காதுகள்' நாவலை வாங்க வந்துள்ளேன். ச.தமிழ்ச்செல்வனின் எசப்பாட்டு, அ.கரீமின் "சிதார்' எனும் கதைத் தொகுப்பு, ஆதவன் தீட்சண்யாவின் "மீசை என்பது மயிரல்ல' ஆகிய நூல்களையும் வாங்கியுள்ளேன். இலக்கிய நூல்களைத் தேடி வாங்கப் போகிறேன்.