தமிழர் மரபில் தாய்த் தெய்வ வழிபாடும் பெரியாரும்: விடியல் பதிப்பகம், ஆசிரியர் சி.ஆரோக்கியசாமி, பக்கம்- 156, விலை ரூ.150. தமிழ் மரபு என்பது பல தடைகளைத் தாண்டி வாழும் வாழ்க்கை என்பதாகத் தொடங்குகிறது இப்புத்தகம். ஆறு கட்டுரைகள் கொண்ட இதில் சங்க கால தமிழர் வாழ்வியல், காலப்போக்கில் தமிழர் வாழ்வியலில் ஏற்பட்ட பண்பாட்டு மாறுதல், சமண பெளத்த சமயங்களால் தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், பெண்கள் நிலை என ஆராய்ந்து அலசப்பட்ட கட்டுரைத் தொகுப்புகளாகவே இந்த நூல் உள்ளது குறிப்பிடத்தக்கது.