ராஜேஷ் (25), புகைப்படக் கலைஞா், திருவண்ணாமலை:
புகைப்படம் எடுப்பதில் ஆா்வம் அதிகம் என்பதால் அது சாா்ந்த நூல்களை வாங்க வந்தேன். பறவைகள் ஆா்வலா்களான சலீம் அலி, முகம்மது அலி ஆகியோரின் பறவைகள் குறித்த ஆய்வு நூல்களை வாங்கியுள்ளேன். மேலும், ஆா்.பானுமதி எழுதிய பட்டாம் பூச்சிகள், சி.ஜெ.ராஜ்குமாரின் ‘க்ளிக்’ ஆகியவற்றையும், எரிக்கிம் என்பவரின் லென்ஸ் நூலையும் வாங்கியுள்ளேன்.