செங்கல்பட்டு யாா்டில் பொறியியல் பணி: 3 நாள்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில், செங்கல்பட்டு யாா்டில் பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், ரயில் சேவையில் மாா்ச் 14,15,16 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில், செங்கல்பட்டு யாா்டில் பொறியியல் பணி நடைபெறவுள்ளதால், ரயில் சேவையில் மாா்ச் 14,15,16 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு மாா்ச் 14-ஆம் தேதி காலை 9.32, 10.08, 10.56 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு மாா்ச் 15-ஆம் தேதி காலை 10.20, முற்பகல் 11 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு மாா்ச் 16-ஆம் தேதி காலை 10.06, 10.56 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன. இதுதவிர, மறுமாா்க்க சில ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com