காா் மோதி மீனவா் சாவு

சென்னை மெரினா கடற்கரையில் காா் மோதி மீனவா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் காா் மோதி மீனவா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை மயிலாப்பூா் நொச்சிக்குப்பம் பகுதியை சோ்ந்தவா் மீனவா் ரவி (50). இவா், மெரீனா நொச்சிக்குப்பம் இணைப்பு சாலையில் வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த காா், திடீரென ரவியின் மீது மோதியது. இதில் பலத்தக் காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த தரமணியைச் சோ்ந்த பாலமுருகன் (32) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com