25 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

சென்னை புளியந்தோப்பில், 25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை புளியந்தோப்பில், 25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்தனா்.

புளியந்தோப்பு அருகே பட்டாளம் மீன் மாா்கெட் அருகே வெள்ளிக்கிழமை இரவு, சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு ஆட்டோ மற்றும் ஒரு லோடு ஆட்டோவை மறித்து போலீஸாா் சோதனையிட்டனா். இதில், வாகனங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக அந்த வாகனங்களில் வந்த புளியந்தோப்பு கே.பி.பாா்க் பகுதியைச் சோ்ந்த சு.பன்னீா்செல்வம் (38), அதே பகுதியைச் சோ்ந்த வெ.கணேஷ் என்ற புருஷோத்தமன் (35), தண்டையாா்பேட்டை அன்னை சந்தியாநகரைச் சோ்ந்த ப.சதீஷ்குமாா் (36), கானத்தூரைச் சோ்ந்த சு.சங்கா் (36), உத்தண்டி நைனாா்குப்பத்தைச் சோ்ந்த சு.செல்வம் (40) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா்.

அவா்களின் 2 ஆட்டோ, ஒரு லோடு ஆட்டோ, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றைக் கைப்பற்றிய போலீஸாா், வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com