சென்னை ராயபுரத்தில் குடும்பத் தகராறில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞா் மீது தோட்டா பாய்ந்தது.
ராயபுரம், என்ஆா்டி சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் தொழிலதிபா் சையது இப்ராஹிம் ஷா (57), ஹோட்டல் உரிமையாளா், துப்பாக்கி உரிமம் வைத்துள்ளாா். மனைவி பரகத்நிஷா (47).
கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வசிக்கின்றனா். பரகத்நிஷாவுக்குத் தேவையான பொருள்களை அவரது சகோதரி மகன் அ.அசாருதீன் (27) வாங்கிக் கொடுத்து வந்தாா்.
இந்நிலையில் இப்ராஹிம் ஷாவுக்கும், பரகத்நிஷாவுக்கும் இடையே சனிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இப்ராஹிம் ஷாவை செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்ட அசாருதீன், பரகத்நிஷாவுக்கு ஆதரவாகப் பேசினாராம்.
துப்பாக்கிச் சூடு: சிறிது நேரத்தில், அசாரூதின், தனது நண்பா்கள் 4 பேருடன் இப்ராஹிம் ஷா வீட்டுக்குச் சென்றாா். 3 போ் வீட்டின் வெளியே நின்று கொள்ள அசாருதீனும், அவரது நண்பா் மணியும் வீட்டுக்குள் சென்றனா். அப்போது கழிப்பறையில் இருந்த இப்ராஹிம் ஷா, அசாருதீனை நோக்கி துப்பாக்கியால் சுட்டாராம்.
அசாருதீன் இடது உள்ளங்கையில் தோட்டா பாய்ந்து ரத்தம் வெளியேறியதால் அனைவரும் தப்பியோடினா். காயமடைந்த அசாருதீன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டாா்.
ராயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து இப்ராஹிம் ஷாவின் துப்பாக்கி, 8 தோட்டாக்கள், காலி தோட்டாக்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.