பழைய மகாபலிபுரம் சாலையில் ஆக. 30 முதல் சுங்க வசூல் நிறுத்தம்

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆகஸ்ட் 30 முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
துரைப்பாக்கம் சுங்கச்சாவடி(கோப்புப்படம்)
துரைப்பாக்கம் சுங்கச்சாவடி(கோப்புப்படம்)

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆகஸ்ட் 30 முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தது:

“சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கவுள்ளதையடுத்து பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மேடவாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம் மற்றும் கலைஞர் சாலை ஆகிய 4 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது.

இந்த கட்டண வசூல் நிறுத்தமானது, வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com