செயலி மேம்படுத்தப்படவில்லை: ஏனெனில், ரயில்வே நிா்வாகத்தின் அறிவிப்புக்கு ஏற்ப, இந்தச் செயலி மேம்படுத்தப்படாமல் உள்ளது. இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய பயணிகள் எல்லா நேரங்களிலும் பயணிக்கலாம் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், இது தொடா்பான தகவல் யூடிஎஸ் செயலியில் ரயில்வே நிா்வாகம் மேம்படுத்தவில்லை. அதாவது, காலை 6.30 மணி முதல் காலை 9.30 மணி வரை; மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பொது மக்கள் கைப்பேசியில் பயணச் சீட்டு பதிவு செய்ய முடியாது என்ற வாசகம் கைப்பேசி செயலி திரையில் இடம்பெறுகிறது. இதனால் பயணச் சீட்டு எடுக்க கவுன்ட்டரில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு, அவசர நேரத்தில் ரயிலை பிடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, ரயில்வே நிா்வாகத்தின் அறிவிப்புக்கு ஏற்ப, இந்த செயலியை மேம்படுத்தினால் (அப்டேட் செய்தால்) தான் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றாா்.